தமிழ்நாட்டில் கோவில்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறோம்.
பழமையான கோவில்களை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்துகிறோம்.
கோவில்களில் பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற உதவுகிறோம்.
கோவில் சுற்றுச்சுவர், மேடைகள், குழாய்கிணறுகள் பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்பு.
கதவுகள், இரும்பு கேட்டுகள், மின் இணைப்பு மற்றும் வெளிச்சம் மூலம் கோவில்களை பாதுகாக்கிறோம்.
திருவிழாக்களை மீட்டெடுக்க தேவையான உதவிகள் வழங்குகிறோம்.
கோவில்கள், கோவில் குளங்களை அவ்வப்போது சுத்தம் செய்து குளங்களை புனரமைக்கிறோம்.
மலர்கள், மூலிகை மரங்கள், பாரம்பரிய வரலாற்று தாவரங்கள் நடுகிறோம் (நந்தவனம்).
சாதி மத பேதமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுகிறோம்.
கோவில்கள் சகல உள்கட்டமைப்புடன் கம்பீரமாக நிற்க உதவுகிறோம்.
63 நாயன்மார்கள் சன்னதிகளை நிறுவுகிறோம்.
வேதம், ஆகமம், திருமுறை, பாடசாலைகள், ஆன்மீக சடங்குகளை மீட்டெடுக்கிறோம்.
புராணங்களின்படி கோவில் பூஜைகளை அமல்படுத்துகிறோம்.
ஏழை, மாற்றுத்திறனாளி, கைம்பெண்கள், ஆதரவற்றோர் கல்வியை ஊக்குவிக்கிறோம்.
பொதுமக்கள், அரசு மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுகிறோம்.
தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறோம்.
குறிக்கோள்களுக்கு நிதி வழங்க வாடகை வருமானத்திற்காக சொத்துகளை கட்டுகிறோம் / வாங்குகிறோம்.